கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்
கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை கோவில்பட்டி நிலைய அலுவலகத்தில் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
தியாகம் செய்து மக்களை காப்பாற்றும் கடமையை செய்யும் தீயணைப்பு வீரர்களை ஊக்குவிப்பதற்காகவும், சமூகத்துக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களை நினைவுகூறுவதற்கும் நாடு முழுவதும் மே 4 ஆம் தேதி சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி நேற்று கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், ஜேசிஐ முன்னாள் செயலாளர் சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜேசிஐ முன்னாள் தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு கலந்துகொண்டு தீயணைப்பு வீரர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் ஏற்புரை வழங்கினார். ஜேசிஐ உறுப்பினர் ரோஜர்அப்ரின், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.