கோவில்பட்டியில் செவிலியர்களுக்கு ‘நைட்டிங்கேல்’ விருது

கோவில்பட்டி தனியார் மருத்துவமனைகளில் ஜேசிஐ சார்பில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
கோவில்பட்டி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கோமதி,கமலா மாரியம்மாள், பத்மாவதி,சஞ்சய் சிவநாராயணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் ஜேசிஐ நிர்வாகிகள் ஜென்சி, தினேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
