கோவில் விழாவில் ஆன்மிக சொற்பொழிவு
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் 7ம் நாள் திருவிழா அன்று இரவு கோவில் கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
ஆன்மிக சொற்பொழிவாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இதில் தலைமையாசிரியர் ஜான் கணேஷ், நாடார் உறவின் முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார், வக்கீல் ரத்தின ராஜா உள்பட வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.