சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி மற்றும் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்,.அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஒரு கண்ணாடி மாளிகை இருக்கிறது. கண்ணாடி மாளிகை மெய்ஞானமும் விஞ்ஞானமும் கலந்தது என பலவித ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. 40 ஆண்டுகளாக ஆன்மிக ஆராய்ச்சி செய்த மிஸ்டிக் செல்வம் இதை உறுதிபடுத்தியுள்ளார். கண் திருஷ்டி, பொறாமையின் தாக்கத்தால் பலரது தொழில் மற்றும் வேலை பல தடைகளை தினமும் சந்திக்க வேண்டியிருக்கிறது.இதை நீக்கிடவும் ,உங்களது நீண்டகாலப்பிரச்சினைகள் தீரவும் ஒரு சுலபமான பரிகாரம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். இந்த பரிகாரம் […]
*திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும் போது சிரட்டையும்,தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. *ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. *தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது.கருவறை குளிர் காலத்தில் வெப்பமாகவும்,வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது. *தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப் படிகளில் தட்டினால் ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற இசை வருகிறது. *கடலுக்கு 3500 அடி உயரத்தில் […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு வரும் 25.6.2022 மற்றும் 26.6.2022 ஆகிய 2 நாட்கள் எழுத்து தேர்வு அறிவித்துள்ளது. இந்த தேர்வு முதன்மை எழுத்து தேர்வு மற்றும் தமிழ்மொழி தகுதி தேர்வு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.அதன்படி 25.6.2022 அன்று காலை பொதுப்பிரிவினருக்கான முதன்மை எழுத்து தேர்வில் 1377 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 6400 பேர் தேர்வு எழுத உள்ளனர். 25.6.2022 அன்று மதியம் தமிழ் மொழிக்கான தகுதி […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேலமுடிமண் பகுதியை சேர்ந்த லெட்சுமணபெருமாள் மகன் கார்த்திக் (வயது 23) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக 27.5.2022 அன்று கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது சகோதரரான செல்வக்குமார் (25) என்பவரை ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் அறிக்கை அளித்தார்.கடந்த 5.6.2022 அன்று கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைத்தாவூர் பகுதியில் […]
கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு அருகே தளவாய்புரம் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள கோவிலுக்கு பின்புறத்தில் ஆண் சடலம் கிடப்பதாக கயத்தார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவருக்கு 28 வயது இருக்கும். தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.அவர் யார்? அவரை கொலை […]
அ.தி.மு.க. பொதுகுழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில் கூறியதாவது:-இரட்டை தலைமையால் சரியான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை. அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை என்ற தீர்மானத்துடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும். பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அவைத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தை வாசிக்கிறேன்.இரட்டைத்தலைமையால் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு. இரட்டை தலைமையால் சங்கடம் ஏற்பட்டுள்ளது. இரட்டைத்தலைமையால் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. .இது கட்சித்தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொண்டர்களுக்கு இதனால் […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-கடந்த 10.5.2022 அன்று சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது தமிழக முதல்வர் மானியக் கோரிக்கை அறிவிப்பு எண் 53ன் படி அரசாணை எண் 259 உள்துறை (காவல் 13) இன் கீழ் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் 2 வாரங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.மேற்படி அறிவிப்பின்படி […]
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. எனவே அவரை பொதுசெயலாளராக தேர்வு செய்ய சிறப்பு தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டது.இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோர்ட்டில் மனு செய்யபட்டது, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது […]
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று (22.6.2022) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் முத்துகுமார் (வயது 28) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே முத்துகுமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ […]