தலையில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை

கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு அருகே தளவாய்புரம் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள கோவிலுக்கு பின்புறத்தில் ஆண் சடலம் கிடப்பதாக கயத்தார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவருக்கு 28 வயது இருக்கும். தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
