• June 7, 2025

இரட்டைத்தலைமையால் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு- சி.வி.சண்முகம்

 இரட்டைத்தலைமையால் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு- சி.வி.சண்முகம்

அ.தி.மு.க. பொதுகுழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில் கூறியதாவது:-
இரட்டை தலைமையால் சரியான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை. அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை என்ற தீர்மானத்துடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும். பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அவைத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தை வாசிக்கிறேன்.
இரட்டைத்தலைமையால் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு. இரட்டை தலைமையால் சங்கடம் ஏற்பட்டுள்ளது. இரட்டைத்தலைமையால் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. .இது கட்சித்தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொண்டர்களுக்கு இதனால் சோர்வு ஏற்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று வலிமையான, தெளிவான ஒற்றைத்தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் .பொதுக்குழுவில் இரட்டைத்தலைமையை ரத்து செய்ய வேண்டும். ஒற்றைத்தலைமையின் கீழ் கட்சியை கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார்.
இதே போல் அ.தி.மு.க. பொதுக்குழு இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *