பாட்டாளி மக்கள் கட்சியின் அடுத்த தலைவர் பொறுப்பை முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் ஏற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை, திருவேற்காட்டில் வரும் 28ஆம் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இப்பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவராக இருந்த ஜி.கே.மணி பா.ம.க. சட்டமன்ற கட்சி தலைவராக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.10 மாவட்டங்களில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவை அடுத்து அவருக்கு தலைமைப் பதவி அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு […]
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி மன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் இங்குள்ள 8 வார்டுகளில் தி.மு.க. 4 வார்டுகளிலும் அ.தி.மு.க. 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தன.இரு கட்சிகளும் சம அளவில் வெற்றி பெற்றதால் தலைவர் பதவி யாருக்கு? என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் இந்த தேர்தலில் கலந்து கொள்ளவில்லை.இதனால் 50 சதவீத உறுப்பினர்களுக்கு […]
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தலசயன பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்விய தேசங்களில் 63-வது திவ்வியதேசம் எனப் போற்றப்படும் இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.கடந்த 2021-ம் ஆண்டு அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குறவ இன மக்களைச் சாப்பிட விடாமல் கோவில் நிர்வாகத்தினர் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்த கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அன்னதான பாகுபாடு குறித்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நரிக்குறவ பெண்ணுடன் […]
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் வெளியிட்டுள்ளார்.கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுசெயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட பார்வையாளர் சசிகலா புஷ்பம் ஆகியோரின் ஒப்புதலுடன் நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதாக அவர் கூறி இருக்கிறார்.நிர்வாகிகள் விவரம் வருமாறு:-மாவட்ட துணை தலைவர்கள்- சி.தங்கம், எஸ்,சரஸ்வதி, டி,பல்க் பெருமாள், எஸ்.பி.வாரியார், எஸ்.சிவராமன், எஸ்.செல்வராஜ், டி,சுவைதார், எஸ்,ரேவதி.மாவட்ட பொது செயலாளர்கள்- ஆர்.சிவமுருக ஆதித்தன், டி.ராஜா, […]
தூத்துக்குடி ️தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமருதூர் பகுதியை சேர்ந்த பொய்யாழி மகன் போஸ் (வயது 28) என்பவருக்கும் வேடநத்தம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிராஜ் (26) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று மாரிராஜ் மற்றும் அவரது நண்பரான வேடநத்தம் பகுதியை சேர்ந்த சுப்புராஜ் மகன் கார்த்திக் (24) ஆகிய 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் போஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை […]
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேர் அடங்குவர். இவர்களில் தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க இருக்கிறது.இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 31-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அ.தி.மு.க.வின் பலம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு பணி (ஜமாபந்தி) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று தொடங்கியது.அதன்படி தூத்துக்குடி தாலுகா ஜமாபந்தி அலுவலராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு ஜமாபந்தியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட உமரிக்கோட்டை, கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, அல்லிக்குளம், மறவன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்குசிலுக்கன்பட்டி ஆகிய 7 கிராமங்களுக்கான கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. அந்த பகுதி பொதுமக்கள் திரளானவர்கள் வந்து மனு கொடுத்தனர்.உட்பிரிவுபட்டா கோரி 8 பேரும், முதியோர் உதவித்தொகை கோரி […]
பக்ரைன் நாட்டில் கொரோனா பாதிப்பு காலத்தின் போதும், பின்னரும் சிறந்த சமூக சேவையாற்றி வரும், ” “லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ்” சமூக உதவி இயக்கம் சிறப்பான சமூக சேவை ஆற்றி வருகிறது. இந்த இயக்கத்தின் அமைப்பாளராக தமிழகத்தின் குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த சையத் ஹனீப் இருக்கிறார்.இவருக்கு “சிறந்த சமூக சேவகர்-2022” விருதை “படவ் குடும்ப சமூகம்” என்ற அமைப்பு, வழங்கியது. 1000 நாட்களுக்கும் மேலாக பக்ரைன் நாட்டை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள குறைந்த வருமானம் […]
அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது தான் தி.மு.க.வின் ஓராண்டு பணி; சசிகலா சொல்கிறார்
சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அ.தி.மு.க.வில் தற்போது இருப்பவர்களை மறைந்த முதல்வர் ஜெயலிலதாவுடன் ஒப்பிட முடியாது. ஒரு கட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு தலைவரை கட்சித் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும். அவர் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவராக இருந்தால்தான் அந்த தலைமையின் கீழ் அனைவரும் கட்டுப்பட்டு இருப்பார்கள். அ.தி.மு.க.வில் தற்போது அதுபோன்ற நிலை இல்லை.பதவிக்காக அ.தி.மு.க.வில் சிலர் எனக்கு எதிராக பேசுகின்றனர். அ.தி.மு.க. தற்போது சரியான எதிர்க்கட்சியாக […]
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 700 பேர் கலந்துகொண்டனர்.இந்த கராத்தே போட்டியில் தூத்துக்குடி ஜப்பான் கராத்தே டூ கென்யோ ரியோ தமிழ்நாடு கராத்தே பயிற்சி மையம் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர். அதேபோன்று கடந்த தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளியில் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் நடத்திய 3 மணி நேரம் தொடர் சிலம்பம் விளையாட்டில் […]