சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக வணிகவியல் மன்ற விழா நடைபெற்றது. வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் எஸ் நஷீர் கான் வரவேற்றார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கே. நைனா முஹம்மது தலைமை தாங்கி பேசினார்.கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. அப்பாஸ் மந்திரி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் எஸ் நாசர் அறிமுகம் செய்தார்.சிறப்புவிருந்தினராக பரமக்குடி, அரசு கலைக்கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் […]
தேர்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் சமர்ப்பித்த ஆண்டு வருமான அறிவிப்புகளை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.அக்டோபர் 31, 2021 வரை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவாக இருந்த போதிலும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 54 மாநில கட்சிகளில் 23 கட்சிகளின் அறிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கவில்லை.ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் கிடைக்காத கட்சிகள் ஆகும். ஜனநாயக […]
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தின் அருகே உள்ள பெருமாள் கோவில் வட்டம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் பல ஏக்கர் உள்ளது. வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் ஏரிக்கரை பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டியிருக்கும் நபர்களுக்கும், தும்பேரி பகுதியை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கும், பெருமாள் கோவில் வட்டத்தில் இடம் ஒதுக்க வருவாய்த்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.இதனை அறிந்த கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு இப்பகுதியில் இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். கால்நடை மற்றும் இதர வகை […]
கடந்த 1993 முதல் 2006 ம் ஆண்டு வரை, முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்ததாக அரியானா முன்னாள் முதல்- மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில், சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டுமார்ச் 26ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம், ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று […]
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை; விளாத்திகுளம் அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு
விளாத்திகுளம் அருகே உள்ள வி. வேடப்பட்டி கிராமத்தில் பருத்தி, மிளகாய், முருங்கை, எலுமிச்சை, தென்னை, கொய்யா, பனை, வாழை, பருப்பு வகைகள் பயிர் செய்யப்பட்டு, விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.மிக வளமையான வைப்பாறு ஆற்றுப்படுகை கொண்ட வண்டல் மண் வளம் கொழித்து கொண்டு உள்ளது. இந்த வளமையான மண்ணில் விவசாயத்தை சீரழிக்கும் வகையில் தனியார் காற்றாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஏற்கனவே வேடப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் காற்றாலை நிறுவ தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேற்படி தீர்மானத்தின் […]
நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் 250 பேர்களில் தமிழகத்தை சேர்ந்த 18 பேர் அடங்குவர். இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி முடிவடைகிறது. அதாவது, தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் , அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் பதவிக்காலம் முடிகிறது,.இதேபோல், மேலும் 14 மாநிலங்களை சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே, மொத்தம் உள்ள 57 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க […]
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சென்னை கிளையின் நிர்வாக குழு உறுப்பினர் அறந்தாங்கி ஏ. நூர் முஹம்மது. துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். துபாயில் அவருக்கு முன்னாள்மாணவர் சங்க அமீரக கிளை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமீரக கிளையின் தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன்எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் எழுதிய ‘வாழ்க்கையில் வெற்றி’ என்ற தன்னம்பிக்கைநூலை அன்பளிப்பாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் திருச்சி ஜாபர் சித்தீக், பொதுச் செயலாளர்திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ஊடகவியாளர் […]
திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சோனியா மற்றும் போலீசார் திருச்செந்தூர் காந்திபுரம் விலக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டnar.அப்போது, அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி சரள் மணல் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து லாரியின் டிரைவரான வெற்றிவேல் (35) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 4½ யூனிட் சரள் மணல் மற்றும் […]
தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் வாரிசுகளில் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக ரூபாய் 25,000/- வரை வழங்கப்படுகிறது.அதன்படி 2020 – 2021 ஆண்டில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வருபவர்களின் வாரிசுகளின் உயர்கல்விக்கான 2022ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை முதல் மற்றும் […]
ஜூன் மாதம் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் உள்பட 41 படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 6 படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. மற்ற படங்கள் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. `விக்ரம் படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்துள்ளார். ஜூன் 3 ந்தேதி இந்த படம் வெளியாகிறது. ஜூன் 6 ந்தேதி கலையரசன்-ஆனந்தி நடித்துள்ளடைட்டானிக் -காதலும் கவுந்து போகும்’ என்ற படம் வெளியாகிறது இந்த படத்தை ஜானகிராம் டைரக்டு செய்துள்ளார். […]