மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் கிரிராஜன் உள்பட 3 பேரும் வேட்பு மனு தாக்கல்

 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் கிரிராஜன் உள்பட 3 பேரும்   வேட்பு மனு தாக்கல்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் 250 பேர்களில் தமிழகத்தை சேர்ந்த 18 பேர் அடங்குவர். இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி முடிவடைகிறது. அதாவது, தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் , அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் பதவிக்காலம் முடிகிறது,.
இதேபோல், மேலும் 14 மாநிலங்களை சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே, மொத்தம் உள்ள 57 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க இருக்கிறது.

தமிழகத்தில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 31-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி எண்ணிக்கை குறைந்ததால் தற்போது 2 உருப்பினர்கள மட்டுமே தேர்வு செய்யமுடியும். திமுகவுக்கு 4 உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம், தில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்ற 3 பேரின் பெயர்களை அறிவித்து விட்டார்.
அவர்களில் இரா.கிரிராஜன் . கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலரும் சட்டசபை செயலாளருமான கே.சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மனு தாக்கல்
கல்யாணசுந்தரம் மனு தாக்கல்


அப்போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் எ.வ,வேலு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
வேட்புமனுக்கள் பரிசீலனை ஜூன் 1-ந்தேதி நடக்கிறது.
வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3-ந்தேதி ஆகும். காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், இந்த தேர்தலில் போட்டி இருக்காது.
கூடுதலாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தால், ஜூன் 10-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *