மணல் திருடியவர் கைது-லாரி பறிமுதல்

திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சோனியா மற்றும் போலீசார் திருச்செந்தூர் காந்திபுரம் விலக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டnar.
அப்போது, அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி சரள் மணல் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து லாரியின் டிரைவரான வெற்றிவேல் (35) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 4½ யூனிட் சரள் மணல் மற்றும் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தார்.
