• May 5, 2024

Month: May 2022

செய்திகள்

ரேசன் கடைகளில் கண் கருவிழி பதிவு முறை; உணவு அமைச்சர் தகவல்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:-ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் (கைரேகை) அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுகிறது. அதனால், மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 100 சதவீதம் கண் கருவிழி பதிவு மூலமாக ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதிகள் […]

செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வு முடிவு வெளியீடு : தமிழக அளவில் முதலிடம் பிடித்து கோவை

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது. இது முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 2021-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வில் வெற்றி பெற்று தகுதி செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஏப்ரல் […]

தூத்துக்குடி

கருணாநிதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்- கீதாஜீவன்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,’கூட்டத்தில், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பேசினார்.. அவர் கூறியதாவது:-கடந்த தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்து கலைஞர் புதிய தலைமை செயலகத்தை தனது நேரடி பார்வையில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கட்டினார். அப்பகுதியில் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடைபாதையில் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம்: மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. வெளிநடப்பு

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் இன்று காலை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.35வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரும், மாமன்ற எதிர்கட்சி தலைவருமான வீரபாகு பேசுகையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இதனால் மக்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர்.அதிலிருந்தே இன்னும் மக்கள் மீளாத நிலையில் தற்போது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தூத்துக்குடி மக்களை மிகவும் பாதிக்கும் வகையில் தீர்மானம் 26ல் குறிப்பிட்டுள்ள வி.இ […]

செய்திகள்

வெளி மாநில தொழிலாளர்கள் விவரம் சேகரிப்பு

தமிழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கட்டிட வேலை, ஓட்டல், விடுதி, இறால் பண்ணைகளில் வேலை பார்க்க அதிகம் பேர் வருகின்றனர்.இது போல் தமிழகத்தில் எத்தனை பேர் வெளி மாநிலத்தவர் உள்ளனர் என்ற சரியான தகவல் இல்லை. எனவே தற்போது முக்கிய நகரங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.இது தொடர்பாக அந்தந்த நகராட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-குறிப்பிட்ட நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில […]

தூத்துக்குடி

‘எந்த ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்’ -பொதுமக்கள் உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு இலந்தைகுளம் பகுதியில் “மாற்றத்தை தேடி” எனும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் கணபதி, கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் அந்தோணி திலீப், காசிராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசுகையில் கூறியதாவது:-‘மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு என்பது […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பஸ் நிலையங்களை இணைக்கும் சர்க்குலர் பஸ்கள்; பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம்

கோவில்பட்டி நகருக்குள் நெருக்கடியை தவிர்க்கும் வைகையில் பைபாஸ் சாலையில் புதிதாக கூடுதல் பஸ் நிலையம் திறக்கபட்டது, ஆனால் அந்த பஸ் நிலையம் தொடர்ந்து இயங்கவில்லை. தற்போது பஸ்கள் எதுவும் பஸ் நிலையத்துக்குள் செல்வதில்லை. பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடாமாக மாறிவிட்டது, வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையம் வெளியே நிறுத்தி பயணிகள் ஏற்றியும் இறக்கியும் செல்கிறார்கள். நள்ளிரவு நேரங்களில் சர்வீஸ் சாலையில் உள்ள பஸ் நிலையம் அருகில் வருவது கிடையாது. பாலத்தின் கீழ்புறத்தில் நடுரோட்டில் […]

செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர் மனு தாக்கல்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.மேலும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அறிவித்தது. இன்று ப.சிதம்பரம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை […]

கோவில்பட்டி

சுவர் இடுக்கில் சிக்கிய பசுமாட்டை மீட்க கடும் போராட்டம்

ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் குறைந்தபட்சம் ஒரு அடி இடம் விடுவது வழக்கம். அது போல் கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியில் இரண்டு வீடுகளுக்கு இடையே சிறிது இடைவெளி காணப்பட்டது.அந்த இடைவெளிக்குள் நேற்று ஒரு பசு மாடு சென்றுவிட்டது. பின்னர் அந்த மாட்டினால் வெளியே வரமுடியவில்லை. சுவர் இடுக்கில் சிக்கிக்கொண்ட அந்த பசுமாடு அலறியது. இந்த சத்தம் கேட்டது அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர், இது பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து […]

கோவில்பட்டி

கலச விளக்கு வேள்வி பூஜை; செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு

கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரானா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் வேண்டி நடந்த இந்த வழிபாட்டில் செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.சக்தி கொடியை மாவட்ட துணைத்தலைவர் பண்டார முருகன் ஏற்றிவைத்தார். ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி. ஆர்.முருகன் கருவறையில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் விளக்கேற்றினார். கலச […]