சுவர் இடுக்கில் சிக்கிய பசுமாட்டை மீட்க கடும் போராட்டம்
ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் குறைந்தபட்சம் ஒரு அடி இடம் விடுவது வழக்கம். அது போல் கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியில் இரண்டு வீடுகளுக்கு இடையே சிறிது இடைவெளி காணப்பட்டது.
அந்த இடைவெளிக்குள் நேற்று ஒரு பசு மாடு சென்றுவிட்டது. பின்னர் அந்த மாட்டினால் வெளியே வரமுடியவில்லை. சுவர் இடுக்கில் சிக்கிக்கொண்ட அந்த பசுமாடு அலறியது. இந்த சத்தம் கேட்டது அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர், இது பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பசு மாட்டை சந்துக்குள் இருந்து ஒருவர் தள்ள, இன்னொருவர் வெளியே இருந்து இழுக்க பெரும் போராட்டமாக இருந்தது. ஒரு சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாடு மீட்கப்பட்டது.
இடுக்கில் இருந்து வெளியே வந்ததும் அந்த மாட்டினால் நடக்கமுடியவில்லை. மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. தண்ணீர் தெளித்து மாட்டை சுய நினைவுக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே மாட்டின் உரிமையாளர் வந்து விட்டார். அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு பாதுகாப்பாக அந்த மாட்டை அழைத்து சென்றார்.