சமத்துவ நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று ’சமத்துவநாள்’ உறுதிமொழி எடுக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்ததையடுத்து தமிழ்நாடு அரசு உறுதிமொழி குறித்து அரசாணை வெளியிட்டது. அதன்படி நாளை (14.4.2023) சமத்துவ நாளை முன்னிட்டு, இன்று (13.4.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எல். பாலாஜி […]
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதன் கிழமையான இன்று (12.4.2023) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மனு கொடுக்க வந்த 24 மனுதாரர்கள் தங்கள் குறைகளை திருநெல்வேலி சரக […]
தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சதுரங்க வீரர், வீராங்கணைகளை ஊக்கப்படுத்தும் வகையில் நாளை (சனிக்கிழமை) மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடக்கிறது. போட்டிகள் 10 வயதுக்கு உட்பட்டோர், 14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய மூன்று பிரிவுகளாகப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக நடக்கிறது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு, மாநில போட்டியில் பங்கு பெறுவதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியாக […]
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:- , தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு, திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யாக இருந்துவரும் சரவணன் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்படுகிறார் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளரான பல்வீர் சிங், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை […]
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் வல்லநாடு நீரேற்று நிலையத்தை பார்வையிட்டேன். நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஆற்றில் வரும் நீர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் தொடர்ந்து கண்கானிக்குமாறும், நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றி உள்ள அமலைச் செடிகள் மற்றும் கிணற்றுக்குள் நீர் வருவதற்கு தடையாக இருக்கும் மணல் திட்டுகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் மேலும் […]
நாடு முழுவதும் மத்திய அரசு 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வாகைகுளம், கயத்தாறு சுங்கச்சாவடி உள்பட 22 சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.அதன்படி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.40 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு ரூ.5-ம், லாரிகளுக்கு ரூ.20-ம், 3 ஆக்சில் கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூ.30-ம், மல்டி ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.40-ம் கட்டணம் […]
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன், வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண உடையில் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார். ரோந்து பணியின் பொது ஒவ்வொரு காவல் நிலையமாக சென்று காவல்துறையினர் சரியாக பணி செய்கிறார்களா என்பது குறித்தும், சமூக விரோதிகளின் நடமாட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று எஸ்..பி..பாலாஜி சரவணன் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளுக்கு சாதாரண உடையணிந்து சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக கையில் மண்வெட்டி […]
மதுரை- தூத்துக்குடி இடையிலான இரட்டை ரெயில் பாதை பணிகள் மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரெயில் நிலையம் வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணியில் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையமானது புதிய பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு ரெயில்கள் நின்று செல்லும் வகையில் மேலூர் ரெயில் நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் மேலூர் ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. இதனால் ரெயில் பாதை பணியை இந்த […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஏப்.4ஆம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஏப்.4ஆம் தேதி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள், 2003 விதி 12 துணை விதி இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்2/எப்.எல்.3 (1)-இன் படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபானக்கடைகளுடன் உரிமதலங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். […]
தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி மற்றும் போக்சோ சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. முதற்கட்டமாக தூத்துக்குடி, தூத்துக்குடி ஊரகம் மற்றும் விளாத்திக்குளம் ஆகிய உட்கோட்டங்களைச் சேர்ந்த போலீசாருக்கு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தொடக்கி வைத்தார், அப்போது அவர் பேசியதாவது:- பொதுமக்களிடம் காவல்துறையினர் அன்பாகவும், கனிவாகவும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
