தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்; 29 பேர் நேரில் மனு

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் புதன் கிழமையான இன்று (12.4.2023) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மனு கொடுக்க வந்த 24 மனுதாரர்கள் தங்கள் குறைகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆகியோரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த இருவரும், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
