கோவில்பட்டி பங்குனி திருவிழா 7-ம் நாள் மண்டகப்படி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாள் மண்டகப்படி நேற்று நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மண்டகப்படிக்கு சுவாமி-அம்பாள் -நடராஜமூர்த்தி எழுந்தருளினார்க்ள.. இரவு 7 மணிக்கு மண்டகப்படி மண்டபத்தில் ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு அபிஷேகம் செய்து சிவப்பு சாத்தி சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது.
நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு வெள்ளை சாத்தி எழுந்தருளல் நடந்து, அதன் தொடர்ச்சியாக இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு அபிஷேகம்,அலங்காரம் செய்து பச்சை சாத்தி எழுந்தருளினார்/
பினர் தீபாராதனைகள் நடைபெற்று வீதி உலா நடந்தது. சைவ வேளாளர்கள் சங்க மண்டகப்படியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
