• June 8, 2025

நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம்

 நகராட்சி பள்ளி  மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம்

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோடை விடுமுறையில் திருக்குறள் படித்து குறள் நெறி வழி நடக்க பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி புதுரோடு நகராட்சி நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார்.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு 2023-24 முத்துச்செல்வம், ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பாராயன் அனைவரையும் வரவேற்றார்.

பள்ளித் தேர்வு முடிந்து கோடை விடுமுறை காலத்தில் திருக்குறள் புத்தகத்தை படித்து குறள்நெறி வழி நடக்க  5ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும்  திருக்குறள் புத்தகத்தினை  ரோட்டரி சங்க உறுப்பினர் பூல்பாண்டி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வீராச்சாமி, முத்து முருகன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *