கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 43-வது மாத அன்னதானம் வழங்கும் நிகழச்சி பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது. பாலமுருகன் ஸ்டோர் பாலமுருகன் வரவேற்றார். விக்னேஸ்வரி என்டர்பிரைசஸ் அசோக், லட்சுமி நாட்டு மருந்து கடை பெரியசாமி, ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஹரி […]
கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது. கயத்தாறு வட்டத்துக்கு உட்பட்ட முடுக்கலான்குளம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்களை போலி பத்திரம் பதிவு செய்து மோசடி செய்த தனியார் நிறுவனங்களை கண்டித்தும், &
நாடு முழுவதும் மார்ச் 8ம் தேதி மகளிருக்கு சம உரிமை வழங்கிடவும், மகளிரின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றவும் சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் கோகிலா அனைவரையும் […]
கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள ஈக்விடாஸ் வங்கி சார்பில் மகளிர்தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி வங்கியின் வர்த்தக மேம்பாட்டு மேலாளர் ரமேஷ், உதவி மேலாளர்கள் பழனி கணேஷ், விண்ணரசன், விஜய் கருப்பசாமி ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணியில் இருந்த செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சொர்ணா நர்சிங் இன்ஸ்டிடியூட் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணிபுரியும் பெண்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் வங்கியின் சேமிப்பு […]
தமிழக வெற்றிக்கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டி சிதம்பரநாடார் காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை நிர்வாகி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் சத்யா சுரேஷ், ஜான்சி கண்ணன்,கோவில்பட்டி ஒன்றிய நிர்வாகி அய்யம்மாள் ஆகியோர் முன்னில வகித்தனர் .மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் முனைவர் சம்பத்குமார் சிறப்புரை ஆற்றினார். கோவில்பட்டி மத்திய ஒன்றிய […]
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரம் கிராமத்தில் பூவன் மனைவி சீதாலட்சுமி(வயது 70), மகள் ராமஜெயந்தி(48)ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். ராமஜெயந்தியின் தந்தை இறந்து விட்ட நிலையில், கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். கடந்த 3-ந்தேதி தாய்-மகள் இருவரும் தலையணையால் கழுத்து பகுதியில் அமுக்கி கொலை செய்யப்பட்டனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இரட்டை கொலையை தொடர்ந்து இருவரும் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகளை கழற்றிகொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர், மறுநாள் நீண்டநேரமாக […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) சார்பாக நாட்டு நலப் பணித்திட்ட முகாம் அணி எண் 180 ஐ சேர்ந்த 41 மாணவர்கள் பிள்ளையார் நத்தம் கிராமத்தில் 7 நாட்கள் முகாமிட்டு சேவையாற்றினார்கள். கல்லூரியின் செயலர் முனைவர் மகேந்திரன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி மற்றும் கல்லூரி இயக்குனர் முனைவர் வெங்கடாச்சலபதி வழிகாட்டுதலின்படி முகாம் தொடங்கப்பட்டது…. சிறப்பு முகாமை இணைப் பேராசிரியரும் தாவரவியல் துறைத் தலைவருமான தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியான முனைவர் மகேஷ்குமார் தொடங்கி […]
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சி மறவர் காலனி, தாமஸ் நகர் பகுதிகளில் 50 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு ஊராட்சி தீர்வை ரசீது, மின் இணைப்பு, சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து தர வேண்டும். அவர்களது வீடுகளுக்கு பட்டா வழங்காத அதிகாரிகளை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை வட்டாட்சியர் சரவணபெருமாள் தலைமையில் […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.20.55 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை இ-பட்டாக்களையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு […]
கோவில்பட்டி வட்டாரம் ஈராச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குடப்பட்ட பாண்டவரமங்கலம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் செலவில் துணை சுகாதார மையக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அமைச்சர் பெ. கீதா ஜீவன் முன்னிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கு ஏற்றினார். .இந்த புதிய துணை சுகாதார மையத்தில் VHN,MLHP,WHV ஆகிய […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
