கோவில்பட்டி அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 7 நாட்கள் முகாம்

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) சார்பாக நாட்டு நலப் பணித்திட்ட முகாம் அணி எண் 180 ஐ சேர்ந்த 41 மாணவர்கள் பிள்ளையார் நத்தம் கிராமத்தில் 7 நாட்கள் முகாமிட்டு சேவையாற்றினார்கள்.
கல்லூரியின் செயலர் முனைவர் மகேந்திரன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி மற்றும் கல்லூரி இயக்குனர் முனைவர் வெங்கடாச்சலபதி வழிகாட்டுதலின்படி முகாம் தொடங்கப்பட்டது….
சிறப்பு முகாமை இணைப் பேராசிரியரும் தாவரவியல் துறைத் தலைவருமான தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியான முனைவர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், மாணவர்களிடையே சமூக சேவை மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாணவர்கள் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை அவர் வலியுறுத்தினார்.
தொடக்க விழாவில் . மின்னணுவியல் துறைச் சார்ந்த சிவராமசுப்பு மற்றும் .ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நலப் பணித்திட்ட முகாமில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் முனைவர் வெள்ளியப்பன் கலந்துகொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியினை செய்தியினை கருத்துக்களை பரிமாறினார்.
முகாமில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் அந்த கிராமத்தில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டனர். சட்ட விழிப்புணர்வு பேரணி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி ,சாலை விழிப்புணர்வு பேரணி, நெகிழி விழிப்புணர்வு பேரணி, போன்றவற்றை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அந்த கிராமத்திலேயே 7 நாட்கள் தங்கி இருந்து இந்த முகாமில் பங்கேற்ற நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மாரிச்சாமி செய்து இருந்தார்.
