• June 15, 2025

ராகவேந்திரா சேவா அறக்கட்டளை அன்னதானம்

 ராகவேந்திரா சேவா அறக்கட்டளை அன்னதானம்

கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 43-வது மாத அன்னதானம் வழங்கும் நிகழச்சி  பத்திரகாளி அம்மன் கோவில்  முன்பு  நடைபெற்றது. பாலமுருகன் ஸ்டோர் பாலமுருகன் வரவேற்றார். விக்னேஸ்வரி என்டர்பிரைசஸ் அசோக், லட்சுமி நாட்டு மருந்து கடை பெரியசாமி, ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஹரி நாடார், கடம்பூர் மாரியம்மன் கோவில் அறங்காவலர் ஜெயராமன், அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், வக்கீல் அரவிந்த் ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், மாரிமுத்து, அக்ரா காளிராஜ், பஜ்ரங் நர்த்தனாலயா கணபதி, தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தேவி பிரேம்ஸ் அண்ட் கிட்ஸ் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *