கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழகச் செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மருத்துவர் ஜோதிலட்சுமி முகாமில் கலந்து கொண்டு 60 பேருக்கு கண் பரிசோதனை செய்தார். 22 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் நடராஜபுரம் தெரு, பொதுமக்கள் நலவாழ்வு இயக்க தலைவர் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிளில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையான இன்று யோகீஸ்வரர் உறவின்முறை சங்கத்தின் சார்பில் மண்டகப்படி நடைபெற்றது.இதையொட்டி காலை 5 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 6 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் தொடர்ந்து வாணவேடிக்கையுடன் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. கருட வாகனத்திற்கான பூக்களை கிளிராஜ் வழங்குகிறார்மண்டகப்படி ஏற்பாடுகளை […]
கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன்(கி.ரா.) கடந்த 2021-ம் மே 18-ல் புதுச்சேரியில் காலமானார். அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் தமிழக அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.இதையடுத்து அவர் படித்த பள்ளியான இடைசெவலில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் […]
கோவில்பட்டி அருகே கயத்தாறு அடுத்த செட்டிக்குறிச்சியை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 35). பூ வியாபாரி. இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.அழகுதுரை நேற்று தனது உறவினருடன் கயத்தாறு மஞ்சநம்பி கிணற்று பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு மதுகுடிக்க சென்றார். அப்போது அழகுதுரைக்கும் அவரது உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார் உரிமையாளரான கரிசல்குளத்தை சேர்ந்த மாடசாமி என்பவர் தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் […]
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான முக்கிய 1௦ திட்டங்கள் பற்றி பட்டியல் தரும்படி எம்.எல்/ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தார்.அதன்படி ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏ.வும் தனது தொகுதிக்கு தேவையான முக்கிய திட்டங்கள் பட்டியலை ஒப்படைத்து வருகிறார்கள்.அந்த வகையில் கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து முக்கியமான 1௦ திட்டங்கள் அடங்கிய பட்டியலை ஒப்படைத்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த திட்டங்கள் விவரம் வருமாறு:- மேற்கண்டவாறு பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் ஸ்டோர்ஸ், வாகனப் பணிமனை கூடங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.மேலும் ஆயுதபூஜையில் இடம் பெறும் பொரிகடலை, வெல்லம், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி வீடுகளில் பூஜை செய்வதுடன், வாகனங்களுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்படும். இதனால் பூஜை பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆயுதபூஜையையொட்டி […]
இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட 5வது மாநாடு கோவில்பட்டி பைரவா மஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட நிர்வாகிகள் சுப்பராஜ், நம் சீனிவாசன் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாரஇந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் தமிழரசன் மாநாட்டு […]
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் டூரோகார்டு நிறுவனத்தின் ஸ்டீல் டோர் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் , கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜு கலந்து கண்டு ஷோரூமை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.இந்நிகழ்ச்சியில் அருண்குமார், கோவில்பட்டி ஆவின் தலைவர் தாமோதரன், நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் சுதா (எ) சுப்புலட்சுமி, மாவட்ட மானவரணி துணை தலைவர் செல்வக்குமார், நகர அம்மா பேரவை செயலாளர் […]
கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் தேவராணி தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும், நகராட்சி 32வது வார்டு கவுன்சிலருமான கவியரசன் கலந்து கொண்டார்.கூட்டத்தில் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்கான 9 தீர்மானங்களை ஆசிரியை பிளசிங் காருண்யா வாசித்தார், அதனை தொடர்ந்து 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன, ஆசிரியை ஸ்ரீதேவி நன்றி கூறினார், இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் […]
கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1,2 மற்றும் 11வது வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிட்ட நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் 3 பேரும் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.மற்ற 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மாநில தேர்தல் ஆணைத்தின் வழிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்பதால் கடம்பூர் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
