கோவில்பட்டியில், இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட மாநாடு
இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட 5வது மாநாடு கோவில்பட்டி பைரவா மஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட நிர்வாகிகள் சுப்பராஜ், நம் சீனிவாசன் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார
இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் தமிழரசன் மாநாட்டு அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி, இஸ்கப் மாநில பொருளாளர கோட்டியப்பன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலத் துணைத் தலைவர் ஜான் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ஜோதிபாசு ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன் ,வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் , நாம் தமிழர் கட்சி தலைவர் ரவிக்குமார் ,இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் காமராஜ் ,வழக்கரைஞர் முத்துராமலிங்கம், எஸ்.எஸ். டி .எம் கல்லூரி செயலாளர் கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்
.
கலைமாமணி விருது பெற்ற ஆசிரியை அமல புஷ்பம் இன்னிசை பாடல்கள் பாடினார். எஸ். எஸ் .டி. எம். கல்லூரி மாணவிகளின் கிராமிய நடனம் ,கரகாட்டம், பறை ஆட்டம் நடைபெற்றது. இந்திய கலாச்சாரம் நட்புறவு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.மாநில குழு உறுப்பினர் பாலசிங்கம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் அனைத்தையும் தமிழ் ஆசிரியை முருக சரஸ்வதி தொகுத்து வழங்கினார். வ.உ.சி யின் 150 வது பிறந்த நாள் விழாவை தூத்துக்குடியில் சிறப்பாக நடத்துவது. மேலும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி அக்டோபர் 11 இல் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பாக பங்கேற்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் முனைவர் சம்பத்குமார் மக்கள் ஒற்றுமை வலியுறுத்தி உறுதிமொழி வாசிக்க மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அதை திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.