கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் தேவராணி தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும், நகராட்சி 32வது வார்டு கவுன்சிலருமான கவியரசன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்கான 9 தீர்மானங்களை ஆசிரியை பிளசிங் காருண்யா வாசித்தார், அதனை தொடர்ந்து 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன, ஆசிரியை ஸ்ரீதேவி நன்றி கூறினார், இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.