• June 7, 2025

கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

 கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழகச் செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மருத்துவர் ஜோதிலட்சுமி முகாமில் கலந்து கொண்டு 60 பேருக்கு கண் பரிசோதனை செய்தார். 22 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் நடராஜபுரம் தெரு, பொதுமக்கள் நலவாழ்வு இயக்க தலைவர் செண்பகம், ஆவல்நத்தம் விவசாயிகள் சங்க செயலாளர் லட்சுமணன், பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை தலைவர் காளிதாஸ் , மக்கள் நலம் அறக்கட்டளை தலைவர் மாரிமுத்து, செயலாளர் கணேஷ் குமார், செய்தி தொடர்பாளர் ஜெகன் மற்றும் அவ்வையார் செல்வம், மருத்துவமனை ஊழியர்கள் விஜயகுமார் ,பத்மாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *