• June 7, 2025

கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் யோகீஸ்வரர் உறவின்முறை சங்க மண்டகப்படி

 கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் யோகீஸ்வரர் உறவின்முறை சங்க மண்டகப்படி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிளில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையான இன்று யோகீஸ்வரர் உறவின்முறை சங்கத்தின் சார்பில் மண்டகப்படி நடைபெற்றது.
இதையொட்டி காலை 5 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 6 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் தொடர்ந்து வாணவேடிக்கையுடன் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. கருட வாகனத்திற்கான பூக்களை கிளிராஜ் வழங்குகிறார்
மண்டகப்படி ஏற்பாடுகளை யோகீஸ்வரர் உறவின்முறை சங்க தலைவர் கண்ணன், செயலாளர் வெயிலுமுத்து, பொருளாளர் திருச்செல்வம், துணை தலைவர்கள் மூக்கையா, செல்லத்துரை, துணை செயலாளர்கள் கே.செல்லத்துரை, பாலமுருகன் ஆகியோர் செய்து உள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *