• June 7, 2025

மதுரை மத்திய சிறையில் கைதிகள் மோதல்; 3 பேர் காயம்

 மதுரை மத்திய சிறையில் கைதிகள் மோதல்; 3 பேர் காயம்

மதுரை மத்திய சிறையில் 1200 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் கனித்குமார் என்பவரும் இந்த சிறையில் தான் உள்ளார்.
இதே சிறையில் .ஒரு வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைகாளியின் கூட்டாளி 10 ஆண்டு தண்டனை அனுபவித்து வருகிறார
இன்று காலை இருவருக்கும் கஞ்சா, பீடி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி வெள்ளைக்காளி தரப்பிற்கும், கனித்குமார் தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். இதில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கைதிகள் மோதிக்கொண்ட சம்பவத்தால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *