துபாயில் தீனிசைப் பாடல்கள் நிகழ்ச்சி துபாய் தேரா நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஓட்டலில் நடந்தது. முஹிப்புல் உலமா கீழை ஏ. முஹம்மது மஹ்ரூப் தலைமை தாங்கினார். ஜலால் இறைவசனங்களை ஓதினார்.ஈமான் சங்க தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லாகான் முன்னிலை வகித்தார்.கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவன தலைவர்முனைவர் ஆ. முகம்மது முகைதீன், பாடகர் நாகூர் நவுசாத் அலி குறித்த அறிமுக உரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாகூர் நவுசாத் அலி, மறைந்த பாடகரும், அவரது தந்தையுமான நாகூர் இ.எம். […]
கர்மா என்றால் என்ன தெரியுமா? அது உங்களுக்கு எந்தவிதக் கெடுதல்களை தரக்கூடியது என்று தெரிந்து கொள்வோம்… ஒருவர் வாழ்க்கையில் சந்தோஷப்படும் பொழுது நீ என்ன புண்ணியம் செய்தாயோ, உனது வாழ்க்கை இவ்வளவு நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள்.அதுவே ஒருவர் துன்பப்படும் பொழுது நீ என்ன பாவம் செய்தாயோ இப்படி கஷ்டப்படுகிறாய் என்று சொல்வார்கள்.இதைத்தான் கர்மா என்றும் சொல்வார்கள். அவ்வாறு கர்மா என்னும் வார்த்தையை அனைவரும் தவறாக புரிந்து கொள்கின்றார்கள். கர்மா என்பதை ஒரு சிலர் அபசகுனமாக எடுத்துக் […]
இன்று ஜூன் 3௦ வியாழக்கிழமை சந்திர தரிசனம்!இன்று மூன்றாம் பிறை, சந்திர தரிசனம் செய்வதால் மன நிம்மதி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை தரிசனம் பார்த்து விட்டால் அந்த ஆண்டு இரண்டு மடங்கு வருமானம் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று மாலை தரிசனம் செய்வது சிறப்பு. வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் […]
கோவில்பட்டி புதுரோடு தார்ச்சாலையில் கால்வாய் போல் ஓடும் சாக்கடை; நகரசபை நிர்வாகத்தின் பாராமுகம்
கோவில்பட்டி நகரின் மிக முக்கிய பிரதான சாலையாக விளங்குவது புதுரோடு. சாத்தூர் பகுதியில் இருந்து இருந்து ரெயில் நிலையம் வழியாக தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகள் செல்லும் முக்கிய சாலை. அரசு மருத்துவமனை க்கு செல்லும் ஆம்புலன்சுகள் இந்த சாலையில் அடிக்கடி பயணிக்கின்றன.இது தவிர வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள் இந்த சாலையில் அதிகம் உள்ளன. உணவு விடுதிகள், டீக்கடைகள், ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், லாரி செட்டுகள், பழைய இரு சக்கர வாகங்கங்கள் விற்பனையகம், மருந்து […]
கோவில்பட்டி ஆலம்பட்டி பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் எட்டையாபுரம் கடலையூரை சேர்ந்த அய்யாத்துரை மனைவி முனீஸ்வரி (வயது 28) என்பவர் தனது குழந்தைக்கு காது குத்துவதற்காக வந்தார். அப்போது கோவிலில் வைத்து அவரது குழந்தை அணிந்திருந்த 3¼ சவரன் தங்க நகை திருட்டு போனது.இதுகுறித்து முனீஸ்வரி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அக்கோவிலில் பூசாரியாக உள்ள சுப்பிரமணியன் (61) என்பவர் முனீஸ்வரி குழந்தையிடமிருந்து தங்க நகையை திருடியது […]
பா.ஜனதாவில் இணைந்ததாக கூறப்பட்ட 13 ஊராட்சி மன்ற தலைவர்கள், கனிமொழி எம்.பி.யுடன் சந்திப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 ஊராட்சி மன்ற தலைவர்கள் பா.ஜனதா கட்சியில் இணைந்ததாக சமீபத்தில் வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கட்சியில் இணைந்ததாக கூறப்பட்ட 13 பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தனர். அப்போது விளாத்திகுளம் […]
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப்புகள் கோவில்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாகவும் அவற்றை டீ கடைக்காரர்கள் வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் கோவில்பட்டி நகராட்சி ஆணையாளருக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் காஜா நஜிமுதீன் தலைமையில் ஒரு குழுவினர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள லாரி செட்டுகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஒரு லாரி செட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 1 லட்சத்து 25 ஆயிரம் எண்ணிக்கையிலான […]
கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.உறுப்பினர் வெளிநடப்பு; பொதுமக்களுடன் சாலை மறியல்
கோவில்பட்டி நகராட்சி கூட்டம் தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் பேசுகையில், நகர்மன்ற கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட வேண்டும் என்றார்அதற்கு பதிலளித்த தலைவர் கருணாநிதி , அடுத்து வரும் கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் என்றார்.பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கூறியதாவது:-நகராட்சிக்கு […]
அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவுகள் ரகசியம்-துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்; டி.ஜெயக்குமார் பேட்டி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் இன்று தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபிறகு கட்சியின் அமைப்புசெயலாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-65 தலைமைக்கழக நிர்வாகிகள்ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரது பதவி அதாவது பொறுப்பு காலாவதி ஆகிவிட்ட சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்துவதற்கு, கழக சட்டதிட்ட விதிகளில் இடமிருக்கின்ற சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்தவேண்டும் என்ற வகையில், எடப்பாடி பழனிசாமியை அதாவது கழக தலைமை நிலைய செயலாளரை, தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும், […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சட்டமன்ற தொகுதி மகளிர் அணி மற்றும் மாணவரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான கருணாநிதி வரவேற்றார். மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசினார்கள்.கூட்டத்தில் மகளிர் அணி, மாணவர் அணியினரிடம் அமைச்சர் கீதாஜீவன் […]