கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் துணிகர திருட்டு சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு விற்பனையாளர்கள் சென்றனர். மறுநாள் காலை கடை திறக்க வந்தபோது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடைக்குள் சென்று பார்த்தபோது 25 மதுபாட்டில்கள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. வெள்ளிக்கிழமை அன்று கடையில் வசூலான பணத்தை எடுத்து சென்று விட்டதால் அந்த பணம் தப்பியது. கல்லாப்பெட்டியில் 50 ரூபாய் மட்டும் […]
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. கோவில்பட்டியிலும் 100 டிகிரி வரை வெயில் அடிக்கிறது. இடையிடையே கோடை மழை பெய்து ஓரளவு குளிர்ச்சி தந்தாலும் பகல் நேரத்தில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சில நிமிடங்கள் மழை பெய்தாலும் பல மணி நேரம் மின் தடையை அனுபவிக்க வேண்டிய கொடுமை கோவில்பட்டி சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று […]
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பயிற்சி மைய நிறுவனர் ந. தினகரன் சார்பில் தொடங்கப்பட்ட தமிழ்த் தொண்டு நிறுவனமான ‘இலக்கியச் சாரல்’ சார்பில் திரையிசைப்பாடல்களில் மக்கள் உள்ளம் கவர்ந்தவர்கள் பாடகர்களே! பாடகிகளே! என்ற பாட்டரங்கம் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் நடைபெற்றது. இசை எப் எம். நிறுவனர் கோ. சுரேஷ்குமார் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரீன் வே பவுண்டேசன் நிறுவனர் சரஸ்வதி தலைமை தாங்கினார். நந்தலாலா சந்திரசேகர் வாழ்த்துப்பாடல் பாட , தமிழாசிரியை […]
கோவை மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவலர் சிறுவர் சிறுமியர் மன்றம் சார்பாக மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டிக்கு வீரர் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. நரசிம்ம நாயக்கன் பாளையம் உயர்நிலைபள்ளியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பாய்ஸ் கிளப் சார்பில் இந்த தேர்வு நடைபெற்றது தேர்வு போட்டியை பெரியநாயக்கன்பாளையம் டி எஸ் பி பொன்னுச்சாமி தொட க்கி வைத்து மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ திடீரென விலகி உள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு […]
கோவில்பட்டி மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி சரிபார்க்கும் நிகழ்வு கடலையூர் ரோட்டில் உள்ள உமா மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம். எல். ஏ.கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,ஒன்றிய செயலாளர் போடுசாமி,மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் முருகன்,கிளைச் செயலாளர்கள் ராமமூர்த்தி, வெற்றிசிகாமணி, விஜயகுமார் ,வேல்ராஜ், சின்னத்துரை,பிச்சைமுத்து, வாவத்தாவூர் முருகன்,சேதுராஜ், முருகன், […]
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என்று நினைவு கூர்ந்து கொண்டாடி வருகிறார்கள். பெரிய வியாழனான நேற்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரணத் தீர்ப்பிடப்பட்ட பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்து செல்லும்போது அவரை சவுக்கால் அடித்து துன்பபடுத்தினர். அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும், ரூ.357.43 கோடி மதிப்பில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார் விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு […]
ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் காணப்பட்ட குறைபாடுகளை அடிப்படையாக கொண்டு 3 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி நிர்வாகம் அபராதம் விதித்து உள்ளது.. வங்கி கடன் வழங்குவதற்கான கடன் முறை வழிகாட்டுதல்கள் மற்றும் பிற சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் தொடர்பான மீறல்களுக்காக கோடக் மஹிந்திரா வங்கிக்கு அதிகபட்சமாக ரூ.61.4 லட்சம் அபராதம் விதித்தது. KYC விதிமுறைகளை பின்பற்றாததற்காக ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கிக்கு ரூ.38.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.29.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையானது வரும் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை”தேர்ந்தெடுக்கப்பட்ட […]