கோவில்பட்டி அப்பனேரியில் 15 நிமிடம் மழை;, 4 மணி நேரம் மின்தடை- மக்கள் அவதி

oplus_32
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. கோவில்பட்டியிலும் 100 டிகிரி வரை வெயில் அடிக்கிறது. இடையிடையே கோடை மழை பெய்து ஓரளவு குளிர்ச்சி தந்தாலும் பகல் நேரத்தில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சில நிமிடங்கள் மழை பெய்தாலும் பல மணி நேரம் மின் தடையை அனுபவிக்க வேண்டிய கொடுமை கோவில்பட்டி சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பனேரி அய்யனேரி உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்தது.
கோவில்பட்டி நகர்ப்புற பகுதியில் ஒரு மணி நேரம் மழை நீடித்தது. இந்த மழையைத் தொடர்ந்து மின் தடை ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் மின் சப்ளை சீரானது.
அதே சமயம் கோவில்பட்டியை ஒட்டி உள்ள அப்பனேரி வெங்கடேஷ்வரா கார்டன் உள்ளிட்ட சில பகுதிகளில் மாலை 4.30 மணி அளவில் தடை செய்யப்பட்ட மின்சாரம், 4 மணி நேரத்துக்கு பிறகு இரவு 8 30 மணி அளவில் சப்ளை செய்யப்பட்டது.
பல மணி நேரம் மின் சப்ளை இல்லாததால், காற்றோட்டம் இல்லாமல் தவித்த மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. இந்த மகிழ்ச்சி 20 நிமிடமே நீடித்தது. மறுபடியும் மின்தடை.
இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இன் சப்ளை இல்லாததால் அப்பனேரி உள்ளிட்ட பல பகுதிகள் இருளில் மூழ்கின. இரவு 9. 40 மணி அளவில் மின் விநியோகம் சீரானது.
இந்த நிலை இன்று மட்டுமல்ல பல நாட்களாக இந்த கொடுமையை இப்பகுதி மக்கள் அனுபவித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா?
