கோவில்பட்டியில் பார்வையாளர்களை கவர்ந்த பாட்டரங்கம்


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பயிற்சி மைய நிறுவனர் ந. தினகரன் சார்பில் தொடங்கப்பட்ட தமிழ்த் தொண்டு நிறுவனமான ‘இலக்கியச் சாரல்’ சார்பில் திரையிசைப்பாடல்களில் மக்கள் உள்ளம் கவர்ந்தவர்கள் பாடகர்களே! பாடகிகளே! என்ற பாட்டரங்கம் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் நடைபெற்றது.
இசை எப் எம். நிறுவனர் கோ. சுரேஷ்குமார் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரீன் வே பவுண்டேசன் நிறுவனர் சரஸ்வதி தலைமை தாங்கினார்.
நந்தலாலா சந்திரசேகர் வாழ்த்துப்பாடல் பாட , தமிழாசிரியை தங்கத்துரையரசி வாழ்த்துரை வழங்க நடுவராக தமிழ்ச் செம்மல் இரா.இராசு இருந்தார்.
பேச்சாளர்களாக ஆசிரியை கண்ணகி, தேசிய நல்லாசிரியை விநாயக சுந்தரி, கொங்கராயக்குறிச்சி தமிழாசிரியை பார்வதி, தமிழ்ப்பணிச் செம்மல் பிரபு, முனைவர் முருகசரஸ்வதி, ஆசிரியை மணிமொழி மங்கை, வானொலி புகழ் கிருஷ்ணன், வானொலி புகழ் சுப்புலட்சுமி மற்றும் வரகவி நல்லாசிரியர் மா. முருகேசன்,வேதாரண்யம் அரசு கல்லூரி முதல்வர் டாக்டர் மா.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பாட்டுகளைப் பாடி மக்களை மகிழ்வித்தனர். ஓய்வு பெறும் நல்லாசிரியர் வரகவி ம. முருகேசன் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது. பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார். தலைமை ஆசிரியர் முருகேசன் ஏற்புரை வழங்கினார்.
மேலும் சாய் இன்டர்நேஷனல் ட்ரஸ்ட் நிறுவனர் வெங்கடேஷ் மற்றும் இலசை இப்ராஹிம் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கணேசன் ஆகியோர் பாராட்டி பேசினர்
பார்வையாளர்கள் அனைவருக்கும் செம்பருத்திப்பூ , சங்குப்பூ ஆற்றல் பானம் மற்றும் வாழைப்பழ லட்டுக்கள் வழங்கப்பட்டது. முருகன் மற்றும் ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் திரிபுரநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


