புனித வெள்ளி: கோவில்பட்டியி ல் கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை ஊர்வலம்


2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என்று நினைவு கூர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
பெரிய வியாழனான நேற்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரணத் தீர்ப்பிடப்பட்ட பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்து செல்லும்போது அவரை சவுக்கால் அடித்து துன்பபடுத்தினர்.
அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு ,சிலுவை மரத்தில் தொங்க விடப்பட்டார். பின் அவர் உயிர் பிரிந்தது அந்த உடலை ஒரு வெள்ளை துணியில் போர்த்தி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்
இதை நினைவு கூரும் வகையில் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளி நிகழ்வு நடைபெற்றது.
இன்று காலை 5 மணி முதல் தொடர் ஆராதனை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையைப் பட்டதை நினைவுகூர்ந்து இயேசு சிலுவையை சுமந்து கொண்டு செல்லும் பாதைகளில் 14 இடங்களில் சிலுவைப்பாதை நிகழ்வுகளை திருத்தல பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார், உதவி பங்குத்தந்தை அருண்குமார் அடிகளார் இணைந்து இந்த இறை நிகழ்வுகளை நடத்தினார்கள்.இதில் இறைமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


