• June 9, 2025
கோவில்பட்டி

கரிசல்குளம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு

கோவில்பட்டி அருகில் கரிசல்குளம் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சுப்புத்தாய்க்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. கிராம மக்கள் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கரிசல்குளம் கிராம பஞ்சாயத்து தலைவி சரோஜா பால்ராஜ் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியை நிர்மலா அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி அரசு ஓய்வூதியர் சங்க பொருளாளர் விஜயன் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பால்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி ஆஷா உறுப்பினர்கள் […]

செய்திகள்

தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை; அமைச்சர் தங்கம் தென்னரசு

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துபேசினார்.அவர் பேசியதாவது:- “தென்மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்த நிலையில், தீப்பெட்டி தொழில் உள்ளது. ஏழை பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் தொழிலாகவும் இருக்கிறது. அந்த தொழிலுக்கு லைட்டர் விற்பனை பெரும் சவாலாக உள்ளது. தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளித்ததின் பேரில், முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் உதிரி பாகங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. […]

செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள் ; மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழக சட்டசபை இன்றைய கூட்டத்தில் , அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:- 1.அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும் 2. அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான பனபலன் இந்த ஆண்டே வழங்கப்படும். 01-10-2025 முதல் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பனப்பலன் பெறலாம்.3.அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும்.4. 3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து […]

செய்திகள்

தமிழ்நாடு அமைச்சரவையில் திடீர் மாற்றம்; பொன்முடி,செந்தில் பாலாஜி நீக்கம்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.  இந்த சூழலில் வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அண்மையில் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தன. பொன்முடியின்  பேச்சையடுத்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. இருந்தபோதும், அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதேபோல, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு 

கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு நீர்மோர் பந்தல் திறப்பு விழா பசுவந்தனை ரோடு நாடார் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் நடைபெற்றது.  மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் தலைமை தாங்கினார். நீர் மோர் பந்தலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர் பழங்கள்,நொங்கு,வெள்ளரிக்காய் வழங்கினார்.  நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர்,நகரச் செயலாளர் கருணாநிதி,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியர் சங்க மாநில மாநாடு

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 34-வது மாநில மாநாடு கோவில்பட்டியில்  இன்று காலை தொடங்கியது. ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சிவகுருநாதன் தேசிய கொடியேற்றினார். சம்மேளன கொடியை பொதுச் செயலாளர் ஜனார்த்தன் மஜும்தார் ஏற்றினார். அஞ்சல் 4-ம் பிரிவு அகில இந்திய பொதுச் செயலாளர் சாராங் தபால்காரர் சங்க கொடியை ஏற்றினார். தொடர்ந்து மாநாட்டுக்கு அஞ்சல் 4-ம் பிரிவு மாநிலத் தலைவர் குமரன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஆயுள் காப்பீட்டுக் கழக முன்னாள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே புளியங்குளம் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்; துரை வைகோ

கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஏ.பி.ஏ.சி. நடுநிலைப்பள்ளியில் தனியார் தொழிற்சாலையின் தொழிலக சமுக பங்களிப்புத் திட்டம் மற்றும் கிராம மக்கள் சார்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.  இதன் திறப்பு விழா நடந்தது.  செமிக்ரோமேடிக் தொழிற்சாலை அதிகாரி யோகசுந்தரம் தலைமை தாங்கினார். ஸ்ரீவாரி அலாய்ஸ் நிர்வாக இயக்குநர் அசோகன் முன்னிலை வகித்தார். மதிமுக துணைப் பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் வரவேற்றார். பள்ளிக்கட்டிடத்தை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. […]

கோவில்பட்டி

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற ஆய்வு சொற்பொழிவு

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் 54 ஆம் ஆண்டு திங்கள் ஆய்வு சொற்பொழிவு திருவள்ளுவர்அரங்கில் இன்று நடைபெற்றது. டாக்டர் சீனிவாசகன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். மன்றச் செயலாளர் நம்.சீனிவாசன் வரவேற்று பேசினார்.  சங்கரன்கோவில் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கர்ராம் நாட்டுப் புறப்பாடல்கள் காட்டும் சமூகப் பார்வை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  ஜான் கணேஷ்,, அமல புஷ்பம், தேசிய விநாயக சுந்தரி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மன்றத்தலைவர் கருத்தப்பாண்டி நன்றி கூறினார். மாணவ – 2 […]

கோவில்பட்டி

மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் மற்றும் சீனியர் ஆண்கள் ஆக்கி அணிகள் தேர்வு;

மாவட்ட ஆக்கி அணிகள் தேர்வு குறித்து ஆக்கி யூனிட்  ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-  சப் ஜூனியர் பெண்கள் மாநில சாம்பியன் போட்டி புதுக்கோட்டையில் மே 5 முதல் 8 வரை நடக்கிறது.மாநில சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் மே 10 முதல் 14 வரை ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக போட்டிகள் நடைபெற உள்ளன. […]

கோவில்பட்டி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில்  இன்று காலை  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  இது குறித்த தகவல் கிடைத்ததும்,  சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பட்டாசு தொழிற்சாலை  தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.   ஆலையில் உள்ள 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.  காயம் அடைந்தவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக […]