கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற ஆய்வு சொற்பொழிவு

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் 54 ஆம் ஆண்டு திங்கள் ஆய்வு சொற்பொழிவு திருவள்ளுவர்அரங்கில் இன்று நடைபெற்றது. டாக்டர் சீனிவாசகன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். மன்றச் செயலாளர் நம்.சீனிவாசன் வரவேற்று பேசினார்.
சங்கரன்கோவில் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கர்ராம் நாட்டுப் புறப்பாடல்கள் காட்டும் சமூகப் பார்வை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஜான் கணேஷ்,, அமல புஷ்பம், தேசிய விநாயக சுந்தரி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மன்றத்தலைவர் கருத்தப்பாண்டி நன்றி கூறினார். மாணவ – 2 திறன் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



