• June 15, 2025

கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியர் சங்க மாநில மாநாடு

 கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியர் சங்க மாநில மாநாடு

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 34-வது மாநில மாநாடு கோவில்பட்டியில்  இன்று காலை தொடங்கியது. ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சிவகுருநாதன் தேசிய கொடியேற்றினார். சம்மேளன கொடியை பொதுச் செயலாளர் ஜனார்த்தன் மஜும்தார் ஏற்றினார்.

அஞ்சல் 4-ம் பிரிவு அகில இந்திய பொதுச் செயலாளர் சாராங் தபால்காரர் சங்க கொடியை ஏற்றினார். தொடர்ந்து மாநாட்டுக்கு அஞ்சல் 4-ம் பிரிவு மாநிலத் தலைவர் குமரன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஆயுள் காப்பீட்டுக் கழக முன்னாள் பொதுச் செயலாளர் தேவபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தொடர்ந்து, சம்மேளன பொதுச் செயலாளர் ஜனார்த்தன் மஜும்தார், முன்னாள் பொதுச் செயலாளர் ராகவேந்திரன், அஞ்சல் 4-ம் பிரிவு அகில இந்திய பொதுச்செயலாளர் சாராங், உதவி பொதுச் செயலாளர் சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் முன்னணி தலைவர்கள் சுப்பையா, ராமராஜ் ஆகியோரும், மாநில திருக்குறள் விருது பெற்ற திண்டுக்கல் கோட்ட முன்னாள் 3-ம் பிரிவு செயலாளர் கணேசனும் பாராட்டப்பட்டனர். 

தொடர்ந்து 2-வது நாளாக நாளையும் மாநாடு நடக்கிறது. மாநாட்டில், ஒருங்கிணைந்த பட்டுவாடா மையத்தை அமைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *