• June 9, 2025
செய்திகள்

மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் ஆனார் ; கவர்னர் பதவி பிரமாணம் செய்து

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இவர்கள் 2 பேரும் 2-வது முறையாக அமைச்சர் பதவியை இழந்துள்ளனர்.  செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரிடம் இருந்த துறைகள் 3 அமைச்சர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கூடுதலாக மின் துறை வழங்கப்பட்டுள்ளது.  வீட்டுவசதி துறைஅமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சரான […]

கோவில்பட்டி

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கேட்டு கிராம மக்கள் போராட்டம்

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பூரணம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்கள், அடிக்கல் நாட்டு பணியுடன் நிறுத்தப்பட்டுள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி பணிகளை தொடங்கி வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:- : பூரணம்மாள் காலனியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் நாங்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறோம். […]

செய்திகள்

வள்ளியூர் அருகே கார்கள் மோதல்; 7 பேர் பரிதாப சாவு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்தை சேர்ந்த தனுஷ்லாஸ் தனது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் மொத்தம் 6 பேருடன் நேற்று மாலை காரில் நாகர்கோவிலுக்கு சென்றார். நெல்லை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வள்ளியூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த வந்த கார் தனுஷ்லாஸ் கார் மீது மோதியது. இதில் இரண்டு கார்களும் நொறுங்கின. கோர விபத்தில் தனுஷ்லாஸ் உள்பட குடும்பத்தினர் 6 பேரும் உடல்நசுங்கி உயிரிழந்தனர். எதிரே வந்த காரில் இருந்த கூடங்குளத்தை சேர்ந்த மெல்கிஸ் […]

பொது தகவல்கள்

மாரடைப்புக்கு  வழிவகுக்கும் `மயோனைஸ்’-மறந்து விடுங்கள்

உணவே மருந்தாக இருந்த காலம் போய் உணவே உடல்நலத்திற்கு கேடு  விளைவிக்கும் உணவாக இன்று மாறிவருகிறது. அந்த வகையில் இன்றைய இளைய தலைமுறையினரால் அதிகமாக ஈர்க்கப்பட்ட உணவுவகைகளுக்கு( தந்தூரி, ஷவர்மா சான்ட்விச் பர்கர் போன்ற அன்னிய நாட்டு உணவுகளுக்கு) சைடிஸ்ஸாக உள்ள மயோனனஸ், வயிற்றுவலி , வாந்தி போன்ற  பல்வேறு  உடல் உபாதைகள் எற்படுத்தக்கூடிய தாக உள்ளது.. பச்சை முட்டையின் மஞ்சள்கரு, எண்ணெய் மற்றும் வினிகர் அல்லது எலுமிச்சம்பழ சாறு  கொண்டு தயாரிக்கபடுகிறது.முட்டையில் உள்ள புரதம் எண்ணெய் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 587 கோரிக்கை மனுக்கள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 587 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.  பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு […]

செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கில்  அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த திண்டுக்கல் கோர்ட்டு உத்தரவு ரத்து

அமைச்சர் ஐ.பெரியசாமி  கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை  அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி சுசீஸா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியில் 23 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் சிக்கினர்

கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக  கஞ்சா விற்பனை செய்த 3 பேரை, சில நாட்களுக்கு முன்பு  போலீசார் கைது செய்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்,  கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து பேக்கிங் செய்து காரில் வைத்து  வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது. டி.எஸ்.பி. ஜெகநாதன்,  இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது,  சப் இன்ஸ்பெக்டர் […]

கோவில்பட்டி

சிமெண்டு பாரம் ஏற்றி சென்ற லாரி, சாலை தடுப்பில் மோதி விபத்து

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. லாரியை மார்த்தாண்டத்தை சேர்ந்த விவின் என்பவர் ஓட்டி சென்றார்.  அந்த லாரி கோவில்பட்டி இனாம் மணியாச்சி பகுதியில் நான்கு வலிசாலையில்  சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே  இரும்பு தடுப்பு வேலியில் மோதியது. சுமார் 200 மீட்டர் தூரம் வரை தடுப்புகளை உடைத்து கொண்டு போய் லாரி […]

செய்திகள்

திட்டங்குளம் அருகே சத்திய முழக்கம் சபை ஆலய அடிக்கல் நாட்டு விழா

கோவில்பட்டி திட்டங்குளம் அருகே சத்திய முழக்கம் சபை ஆலய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சத்திய முழக்கம் சபை ஆலய அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி,திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன்,ராதாகிருஷ்ணன்,பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,சத்திய முழக்கம் சபை பாஸ்டர் ஸ்டீபன்,மதுரை ஹைகோர்ட் வழக்கறிஞர் சாமிதுரை,பாஸ்டர்கள் கார்த்தி கமாலியேல், பிரவீன்ராஜ்குமார்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள் மற்றும் இறைமக்கள் பலர் […]

கோவில்பட்டி

கரிசல்குளம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு

கோவில்பட்டி அருகில் கரிசல்குளம் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சுப்புத்தாய்க்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. கிராம மக்கள் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கரிசல்குளம் கிராம பஞ்சாயத்து தலைவி சரோஜா பால்ராஜ் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியை நிர்மலா அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி அரசு ஓய்வூதியர் சங்க பொருளாளர் விஜயன் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பால்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி ஆஷா உறுப்பினர்கள் […]