கோவில்பட்டி செக்கடித்தெருவில் உள்ள 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் 17ம்ஆண்டு வருடாபிஷேகவிழா நடந்தது. இதையொட்டி கணபதிஹோமம், யாகசாலை பூஜை,கோபுரவிமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்,அலங்கார தீபாராதனை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்மன் திருவீதஉலா நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்தும் சி.பி.ஐ.விசாரணை நடத்தகோ ரியும் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி 12- வது மையவாடி எதிர் புறமுள்ள மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது, தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. எஸ்பி சண்முகநாதன் தலைமைதாங்கினர். ஆர்ப்பாட்டத்தில்.. முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதிக்கு காயல்பட்டினம் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர் எஸ்.ஜே.கென்னடி அனுப்பி இருக்கும் மனுவில் கூறி இருப்பதாவது:- காயல்பட்டினம் மாநகராட்சி பகுதிகளில். மின் கம்பங்களில் அரசு கேபிள் டி.வி.க்கான ஒயர்களை கட்டி இருக்கிறோம். தனியார் கேபிள் டி.வி.ஆபரேட்டர்களும் ஒயர்களை கட்டி உள்ளனர்., மின்வாரிய ஊழியர்கள் அரசு கேபிள் ஓயர்களை வெட்டி சேதப்படுத்தி விடுகிறார்கள். அதே சமயம் தனியார் கேபிள் டி.வி.ஒயர்களை சேதப்படுத்துவது கிடையாது. தற்போது வரை ரூ.10 லட்சம் வரையிலான ஒயர்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அவருடன் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சென்று இருந்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான ஊரில் நேரில் பார்வையிட்டது பற்றி கவர்னரிடம் அண்ணாமலை விளக்கி கூறினார். மேலும் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் வரை பலியாகி இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து சி,பி.ஐ.விசாரணை வேண்டும் என்று கோரி மனு அளித்தார். கவர்னரை சந்தித்த பிறகு அண்ணாமலை தனது எக்ஸ் […]
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் இடம்பெறும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை […]
கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து மாதம்தோறும கடைசி ஞாயிறு அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) 147 வது கண்சிகிச்சைமுகாம் கோவில் பட்டி செயின்ட் பால்ஸ் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது. பழைய […]
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024 இல் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கவிதைகளை தொகுத்து நூல் வெளியீட்டு விழாவும் சென்னை சிஐடி நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி, மிஷ்கின் , பிருந்தா சாரதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, கவிஞர்கள் ஜெய பாஸ்கரன், மு. முருகேஷ், பதிப்பாளர் மு. வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் பரிசாக ரூ.25000, இரண்டாவது பரிசாக ரூ.15,000, மூன்றாவது […]
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கோவில்பட்டி நகர் நலம் வேண்டியும் , மழை வளம் வேண்டியும், தொழிழ்வளம் சிறக்கவும்,விவசாயம் செழிக்கவும்,மாணவ மாணவியர் கல்வியில் சிறந்து விளங்கவும்,மக்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ்வும் கலச விளக்கு மஹா வேள்வி பூஜை நடைபெற்றது. வேள்வி பூஜையை மன்ற மாவட்ட பொருளாளர் கணபதி ராமசுப்பிரமணியம்தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் பண்டாரமுருகன், செயலாளர் முத்தையா, இணைச்செயலாளர் ஆறுமுகம்,கண் மருத்துவர் உமா,கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி,செயலாளர் கோபிநாத்,பொருளாளர் கற்பகவல்லி […]
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள முக்காணி வடக்கு யாதவர் தெருவை சேர்ந்த பலவேசம் மனைவி நட்டார் சாந்தி (வயது 45), சுந்தரம் மனைவி சண்முகத்தாய் (49), தேவர் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மனைவி பார்வதி (40), சித்திரவேல் மனைவி அமராவதி (50). இவர்கள் 4 பேரும் முக்காணி தேவர் தெருவில் உள்ள ரோட்டோரம் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் சென்ற ஒரு கார், குழாயில் தண்ணீர் பிடித்துக் […]
கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 80-வது மாதக் கூட்டம், என். கே. ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி பேராசிரியர் குருசித்திர சண்முகபாரதி தலைமை தாங்கினார். கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளியின் பணி நிறைவு செய்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி மு. அனுஸ்ரீ நாகவர்ஷினி மற்றும் 1330 திருக்குறளையும் ஒப்புவித்த, என் சுப்பையா […]