கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவில் வருடாபிஷேக விழா

கோவில்பட்டி செக்கடித்தெருவில் உள்ள 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் 17ம்ஆண்டு வருடாபிஷேகவிழா நடந்தது. இதையொட்டி கணபதிஹோமம், யாகசாலை பூஜை,கோபுரவிமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்,அலங்கார தீபாராதனை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்மன் திருவீதஉலா நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
