தூத்துக்குடி ஆர்ப்பாட்டத்தில் கடம்பூர் ராஜு பங்கேற்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்தும் சி.பி.ஐ.விசாரணை நடத்தகோ ரியும் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி 12- வது மையவாடி எதிர் புறமுள்ள மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது,
தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. எஸ்பி சண்முகநாதன் தலைமைதாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில்.. முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், சின்னப்பன்,அமைப்பு செயலாளர் சின்னத்துரை,முன்னாள் மத்திய கூட்டுறவு சங்கம் தலைவர் சுதாகர், முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸி, முன்னாள் சேர்மன் ஹென்றி அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் 500 பேருக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். மகளிர் போலீசார் தண்ணீர் கொடுத்து அமர செய்தார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
