• June 7, 2025

அரசு கேபிள் டி.வி.ஒயர்களை வெட்டி சேதம் ; தூத்துக்குடி ஆட்சியருக்கு புகார்

 அரசு கேபிள் டி.வி.ஒயர்களை வெட்டி சேதம் ; தூத்துக்குடி ஆட்சியருக்கு  புகார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதிக்கு காயல்பட்டினம் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர் எஸ்.ஜே.கென்னடி அனுப்பி இருக்கும் மனுவில் கூறி இருப்பதாவது:-

காயல்பட்டினம் மாநகராட்சி பகுதிகளில். மின் கம்பங்களில் அரசு கேபிள் டி.வி.க்கான ஒயர்களை கட்டி இருக்கிறோம். தனியார் கேபிள் டி.வி.ஆபரேட்டர்களும் ஒயர்களை கட்டி உள்ளனர்.,

மின்வாரிய ஊழியர்கள் அரசு கேபிள் ஓயர்களை வெட்டி சேதப்படுத்தி விடுகிறார்கள். அதே சமயம் தனியார் கேபிள் டி.வி.ஒயர்களை சேதப்படுத்துவது கிடையாது. தற்போது வரை ரூ.10 லட்சம் வரையிலான ஒயர்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

ஏற்கனவே அரசு கேபிள் டி.வி.ஒயர்களை சேதப்படுத்த கூடாது என்று ஆட்சியராக இருந்த  செந்தில்ராஜ் உத்தரவிட்டு இருந்தார். எனவே இனிமேல் மின்சார ஓயர்களில் இணைந்து செல்லும் அரசு கேபிள் டி.வி.ஒயர்களை வெட்டி சேதப்படுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *