கோவில்பட்டி மகிழ்வோர் மன்ற கூட்டத்தில் சாதனை மாணவிகளுக்கு பாராட்டு


கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 80-வது மாதக் கூட்டம், என். கே. ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி பேராசிரியர் குருசித்திர சண்முகபாரதி தலைமை தாங்கினார். கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளியின் பணி நிறைவு செய்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி மு. அனுஸ்ரீ நாகவர்ஷினி மற்றும் 1330 திருக்குறளையும் ஒப்புவித்த, என்
சுப்பையா புரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ச. கர்ஷிணி ஆகியோருக்கு மகிழ்வோர் மன்றத்தின் ‘இளம் சாதனையாளர்’விருதும், உதயா வுக்கு மகிழ்வோர் மன்றத்தின் ‘வாசிப்பதை நேசிப்பவர்’விருதும் வழங்கி பாராட்டப்பட்டது.
மாணவர்கள் நகைச்சவை துணுக்குகள் கூறினர். அதனை தொடர்ந்து தமிழ்த்தென்றல், முனைவர். எஸ். டி. கலையமுதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, “வாழ்க்கையை கொண்டாடுவோம்…!” என்னும் தலைப்பில் மகிழ்வுரை வழங்கினார்.
கூட்டத்தில் மன்ற இயக்குனர் ஜான்கணேஷ், காப்பாளர்கள் மோகன்ராஜ், சேர்மத்துரை, உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம், கோவில்பட்டி கம்பன் கழக நிர்வாக குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், மனோகர், தலைமையாசிரியர் காசிராஜன், தமிழாசிரியர்கள் ராஜசேகர், ஜான்சிராணி, ஆசிரியைகள் உலகம்மாள், ராதா, சித்ரா, ஓய்வு பெற்ற ஆசிரியர் அரிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா தொடக்கத்தில் மன்ற காப்பாளர் செல்வின் அனைவரையும் வரவேற்றார்.முடிவில் இன்னொரு காப்பாளர் துரைராஜ் நன்றி கூறினார்.
