தூத்துக்குடியில் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சி; 10 பேருக்கு கனிமொழி காதொலி கருவி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில், தூத்துக்குடி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சியளிக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை தாங்கினார்.
மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை நிபுணர் மருத்துவர் ரஞ்சித் , ஒலியியல் பேராசிரியர் மேத்யூ நிஷாந்த் ஆகியோர் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சியை விளக்கினார்.
முகாமில் மாணவ, மாணவிகளுக்கு செவித்திறன் குறைபாடு எதனால் வருகிறது, அதைக் கண்டறியும் வழிமுறைகள். செவித்திறன் குறைபாடு இருந்தால் மேல் பரிசோதனைக்கு பரிந்துரை செய்வது ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கனிமொழி எம்.பி முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சி மருத்துவ வல்லுநர்களால் அளிக்கப்பட்டது.

நிகழ்வில், 10 பேருக்கு காதொலி கருவிகள், 12 பயனாளிகளுக்கு சுயஉதவி கடன், 5 மாற்றுத்திறனாளிகளுக்க இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 3 பேருக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமன சான்றிதழ்களை கனிமொழி எம்,.பி.வழங்கினார்.
நிகழ்ச்சியில் , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாவட்ட பயற்சிக் குழு தலைவர் மருத்துவர் பாரதிதாசன், தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ச.பொற்செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவக்குமார், தூத்துக்குடி நலப் பணிகள் இணை இயக்குநர் விஜயா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
