ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் வேள்வி பூஜை

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கோவில்பட்டி நகர் நலம் வேண்டியும் , மழை வளம் வேண்டியும், தொழிழ்வளம் சிறக்கவும்,விவசாயம் செழிக்கவும்,மாணவ மாணவியர் கல்வியில் சிறந்து விளங்கவும்,மக்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ்வும் கலச விளக்கு மஹா வேள்வி பூஜை நடைபெற்றது.
வேள்வி பூஜையை மன்ற மாவட்ட பொருளாளர் கணபதி ராமசுப்பிரமணியம்தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் பண்டாரமுருகன், செயலாளர் முத்தையா, இணைச்செயலாளர் ஆறுமுகம்,கண் மருத்துவர் உமா,கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி,செயலாளர் கோபிநாத்,பொருளாளர் கற்பகவல்லி
மற்றும் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வேள்வி பூஜையை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
