கோவில்பட்டி முகாமில் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு 29 பேர் தேர்வு

கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து மாதம்தோறும கடைசி ஞாயிறு அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) 147 வது கண்சிகிச்சைமுகாம் கோவில் பட்டி செயின்ட் பால்ஸ் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது.
பழைய மாணவர் சங்க தலைவர் ஜி.ஜெயராஜ் தலைமையிலும் செயலாளர் என்.ராஜவேல்
முன்னிலையிலும் நடந்த முகாமில் 110 பேர் வெளிநோயாளிகளாக கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண்புரை அறுவை சிகிச்சைக்காக 29 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் இலவச அறுவை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
