• June 7, 2025

கோவில்பட்டி முகாமில் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு 29 பேர் தேர்வு 

 கோவில்பட்டி முகாமில் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு 29 பேர் தேர்வு 

கோவில்பட்டி   1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக   கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து   மாதம்தோறும   கடைசி ஞாயிறு அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது. 

அதன்படி இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) 147 வது கண்சிகிச்சைமுகாம் கோவில் பட்டி  செயின்ட் பால்ஸ் பள்ளியில் காலை   10 மணி முதல்   மதியம்   2 மணிவரை  நடைபெற்றது.

  பழைய மாணவர் சங்க தலைவர்    ஜி.ஜெயராஜ் தலைமையிலும்   செயலாளர்  என்.ராஜவேல் 

முன்னிலையிலும்  நடந்த முகாமில் 110 பேர் வெளிநோயாளிகளாக கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண்புரை அறுவை சிகிச்சைக்காக 29 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் இலவச அறுவை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *