• June 6, 2025

Month: June 2024

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: திமுக கூட்டணியின் வரலாற்று சாதனை

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில்நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 39 புதுச்சேரியில் 1 என 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. எதிரணியில் இருந்த கட்சிகள் எதுவும் ஒரு தொகுதியில்  கூட வெற்றி பெறமுடியவில்லை. அந்த அளவுக்கு திமுக அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை பெற்று இருக்கிறது. திமுக 21, காங்கிரஸ் 9+1=10, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், […]

தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி 5,40,879 வாக்குகள் பெற்று அபார வெற்றி; எதிர்த்து போட்டியிட்ட

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில் இடம்பெற்ற தமாகா சார்பில் விஜ்யசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரோவினா ரூத் ஜேன் உள்பட 28 வேட்பாளர்கள் களம் கண்டனர். இன்று காலை தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ,முதலில் தபால்வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக வேட்பாளர் கனிமொழி அதிக வாக்குகள் பெற்றார். தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் […]

தூத்துக்குடி

ஒரே நேர் கோட்டில் அணிவகுத்த கோள்கள்: தூத்துக்குடியில் இருந்து டெலஸ்கோப் மூலம்  பொதுமக்கள்

ஜூன் 3 மற்றும் 4 ம் தேதிகளில் அதிகாலை முதல் கீழ் திசை வானில் ஒரே நேர் கோட்டில் வியாழன் ,புதன், பூரேனேஸ், சனி,செவ்வாய்,நெப்டியூன்,ஆகிய 6 கோள்கள் அணிவகுத்து நின்றன. அணிவகுத்து என்ற கோள்களை பொதுமக்கள் டெலஸ்கோப்மூலம் பார்வையிட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சஏற்பாடுகள் செய்திருந்தது. .தூத்துக்குடி கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் அணிவகுத்து நின்ற கோள்களை பார்வையிட்டனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி முன்னிலை

தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை  வ.உ.சி.பொறியியல் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. வேட்பாளரின் வாக்கு முகவர்கள் தொகுதி வாரியாக கடும் சோதனைக்கு பின்னர் வாக்கு என்னும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியமான லட்சுமிபதி, மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர். முதல் கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் என்னும் பணி தொடங்கியது. 8.40 மணிக்கு தொகுதி வாரியாக வாக்குகள் என்னும் பணி தொடங்கியது. தூத்துக்குடி தொகுதியில் இன்று […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பகுதியில் கிணற்று பாசனம் மூலம் கம்பு தானியம் சாகுபடி அமோகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில்  கடந்த ராபி புரட்டாசி பட்டத்தில் பயறு வகைகள், பயிர்வகைகள், எண்ணெய் வித்துக்கள், பணப்பயிர்கள் போன்றவைகள் பயிரிட்டனர்.  டிசம்பர் மாத பெய்த பெருமழைக்கு பயிர்கள் கடுமையாக சேதமடைந்து விளைச்சல்  முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.  இந்நிலையில் கோடையில் கிணற்றுப்பாசனம் மூலம் பருத்தி, சீனி அவரை, வெள்ளரி, காய்கனிகள் பயிரிட்டு உள்ளனர். குறைந்த நாள் பயிரான கம்பு கோவில்பட்டி, கடலையூர், லிங்கம்பட்டி, எட்டையபுரம், புதூர், முத்துலாபுரம் போன்ற பகுதிகளில் அதிகளவில் பயிரிட்டு […]

கோவில்பட்டி

இயற்கை மருத்துவமுறை செயல் விளக்க பயிற்சி முகாம் 

கோவில்பட்டி இந்திரா நகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் இயற்கை மருத்துவ முறை செயல்விளக்கப்பயிற்சி முகாம் நடந்தது. நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்தும் இயற்கை மருத்துவத்தில் கண் குவளை மூலம் கண்களை சுத்தம் செய்தல், மூக்கு குவளை மூலம் மூக்கை சுத்தம் செய்தல் குறித்து செயல் விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா தலைமை தாங்கினார். பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். கல்லூரி ஆசிரியர் பூபதி வரவேற்றார். […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான  பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடந்தது. இந்திய பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை(4-ந் தேதி) நடைபெறுகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை வ.உ.சி.,கல்லூரியில் நடக்கிறது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் அலுவலக […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கருணாநிதி பிறந்தநாள் விழா                             

கோவில்பட்டி இனாம்மணியாச்சி சந்திப்பு பகுதியில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள்  முதலமைச்சருமான  கருணாநிதியின் 101வது பிறந்தநாள்விழா கொண்டாடபட்டது. திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் ஏற்பாட்டில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் கோவில்பட்டி யூனியன்சேர்மன் கஸ்தூரிசுப்புராஜ்,மேற்கு ஒன்றியசெயலாளர் ராதாகிருஷ்ணன்,செயற்குழுஉறுப்பினர் ராதாகிருஷ்ணன்,வக்கீல் அழகர்சாமி,மாவட்ட ஒன்றிய மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

செய்திகள்

கருணாநிதி 101-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று (திங்கட்கிழமை) 101-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்,உள்ளாட்சி ம மன்ற  பிரதிநிகள், கட்சி  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு பெற்றதை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: போபால் அணிக்கு வெற்றி கோப்பை 

கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்திய இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 13 -வது  அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி தொடங்கியது. கோவில்பட்டி செயற்கை  புல்வெளி மைதானத்தில் 10 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் […]