தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி முன்னிலை

தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை வ.உ.சி.பொறியியல் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது.
வேட்பாளரின் வாக்கு முகவர்கள் தொகுதி வாரியாக கடும் சோதனைக்கு பின்னர் வாக்கு என்னும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியமான லட்சுமிபதி, மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
முதல் கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் என்னும் பணி தொடங்கியது. 8.40 மணிக்கு தொகுதி வாரியாக வாக்குகள் என்னும் பணி தொடங்கியது.
தூத்துக்குடி தொகுதியில் இன்று காலை 11 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கனிமொழி 54,685 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை விட 38005 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
அதிமுக வேட்பாளர் 16680 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 11712 வாக்குகளும், த.மா.கா. வேடபாளர் விஜயசீலன் 11616 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
