இயற்கை மருத்துவமுறை செயல் விளக்க பயிற்சி முகாம் 

 இயற்கை மருத்துவமுறை செயல் விளக்க பயிற்சி முகாம் 

கோவில்பட்டி இந்திரா நகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் இயற்கை மருத்துவ முறை செயல்விளக்கப்பயிற்சி முகாம் நடந்தது.

நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்தும் இயற்கை மருத்துவத்தில் கண் குவளை மூலம் கண்களை சுத்தம் செய்தல், மூக்கு குவளை மூலம் மூக்கை சுத்தம் செய்தல் குறித்து செயல் விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா தலைமை தாங்கினார்.

பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.

கல்லூரி ஆசிரியர் பூபதி வரவேற்றார்.

கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை  மருத்துவமனை இயற்கை மருத்துவர் திருமுருகன் கலந்துகொண்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தார்.

அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவ நர்சிங் உதவியாளர் கண்ணன்,நர்சிங் கல்லூரி பயிற்றுநர்கள் ரின்சி,ஸ்ரீரெங்கம்மாள், தேவி மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி பயிற்றுநர் திவ்யா நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *