கருணாநிதி 101-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

 கருணாநிதி 101-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று (திங்கட்கிழமை) 101-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்,உள்ளாட்சி ம மன்ற  பிரதிநிகள், கட்சி  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து 1,2  மற்றும் 3-வது சிறப்பு மலரை முதல் அமைச்சர் மு .க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அறிஞர் அண்ணா நினைவிடத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவபடத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.


மேலும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருனாநிதி உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *