கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு கோவைக்கு செல்ல 2 பஸ்கள் தயாராக இருந்தன. கோவில்பட்டி மற்றும் சாத்தூர் அரசு போக்குவரத்துகழக பணிமனைகளை சேர்ந்த 2 பஸ்களின் டிரைவர்கள் இடையே யார் முதலில் பயணிகளை ஏற்றி செல்வது என்ற போட்டி ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் முதலில் நாங்கள் தான் பயணிகளை ஏற்றிசெல்வோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்., 2 பஸ்களின் நடத்துனர்கள் மற்றும் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் எந்த பஸ்சில் ஏறுவது என்று […]
கோவில்பட்டி அரசு தலைமை மாவட்ட மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா துறை,கோவில்பட்டி வாழும் கலை அமைப்பு ஆகியவை சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா செயல் விளக்க பயிற்சி நடந்தது. இயற்கை மருத்துவ முறையில் கண் மற்றும் நாசி சுத்தப்படுத்துதல் குறித்தும்.யோகா மூலம் சூரிய நமஸ்காரம், பிராணாயாமம் செயல்விளக்க பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வாழும் கலை அமைப்பின் நிர்வாகி செந்தில்நாயகம் தலைமை தாங்கினார். செந்தூர்பாண்டியன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி […]
கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ. 5 லட்சம் மதிப்பில், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கும் காத்திருப்பு மையம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். விழாவில், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், துாத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், மாவட்ட கலை இலக்கிய […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பங்குனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வற்றி, புல்பூண்டுகள் காய்ந்து சருகாகி கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் போனது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கூமாபட்டிக்கு வளர்ப்பு ஆடுகளை கொண்டு சென்று விவசாயிகள் காப்பாற்றி வந்தனர். நிரம்பி இருந்த நீர் நிலைகளில் ஏப்ரல் மாதம் கடும் வெயிலால் தண்ணீர் வற்றியது. கால்நடைகளுக்கு உலர்ந்த தீவனங்கள் கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் […]
இந்தியாவில் 2015 ம் ஆண்டில் இருந்து சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி யோகா தினம் கொண்டாடப்படுகிறது, அந்த வகையில் கோவில்பட்டி யோகாலயா பயிற்சி நிலையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் வருகிற 21-ந்தேதி கோவில்பட்டி ஆர்த்தி மகால் வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை பிரமாண்டமாக கொண்டாட யோகா குணா ஏற்பாடு செய்துள்ளார். […]
இந்திய கலாச்சார நட்புறக்கழகம் சார்பாக சுதந்திர தியாகி வாஞ்சிநாதன் 113வது நினைவு தின நிகழ்ச்சி கோவில்பட்டி காயத்ரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முன்னாள் அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமைதாங்கினார். இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் மாநில செயலாளர் க.தமிழரசன் தியாகி வாஞ்சிநாதனின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேசினார்,. தியாகி வாஞ்சிநாதன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் நிர்வாகிகள் சுபேதார் கருப்பசாமி, கல்லூரணி ராதாகிருஷ்ணன், ஆவல்நத்தம் லட்சுமணன், செண்பகம், உத்தண்டராமன், ஜீவா, […]
குவைத் நாட்டின் மங்கப் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்த கோவில்பட்டி தாலுகா வானரமுட்டி கிராமத்தைச சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் என்பவரது குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். கழுகுமலை பேரூராட்சித் துணைத் தலைவர் சுப்பிரமணியன், கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டில் `நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றிய மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அந்தவகையில் தற்போது லண்டன் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வார திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு பிரிட்டீஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுடன் […]
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமிய பெருமக்கள் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தி பின்னர் ஏழை எளியவர்களுக்கு குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர். புனித ஹஜ் யாத்திரையின் நிறைவு நாளை ஹஜ் பெருநாள் என்றும், பக்ரீத் பண்டிகை என்றும் கொண்டாடி மகிழ்கின்றனர். இறை தூதர் இப்ராஹீம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி, தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள்.இந்த நாளில் இஸ்லாமியர்கள் குர்பானி எனப்படும் வழிபாடு […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த தூத்துக்குடி தொகுதி மக்களை கனிமொழி எம்.பி.நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு குலசேகரபுரத்தில் தொடங்கி லிங்கம்பட்டி, வடக்கு திட்டங்குளம், தெற்கு திட்டங்குளம், விஜயபுாி, காிசல்குளம், பாண்டவர் மங்கலம், பசுவந்தனை […]