நான் முதல்வன் திட்டம்: இங்கிலாந்தில் ஒரு வார பயிற்சி முடிந்து சென்னை திரும்பிய மாணவர்கள்

தமிழ்நாட்டில் `நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றிய மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம்.
அந்தவகையில் தற்போது லண்டன் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வார திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு பிரிட்டீஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுடன் 2 பேராசிரியர்களும் உடன் சென்றனர்.
இங்கிலாந்தில் தங்கி ஒரு வாரம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 25 பெரும் இன்று காலை சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு அவர்கள் கிளம்பி சென்றனர்.
