குவைத் தீவிபத்தில் இறந்த வானரமுட்டி மாரியப்பன் குடும்பத்துக்கு அரசு உதவி

குவைத் நாட்டின் மங்கப் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்த கோவில்பட்டி தாலுகா வானரமுட்டி கிராமத்தைச சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் என்பவரது குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். கழுகுமலை பேரூராட்சித் துணைத் தலைவர் சுப்பிரமணியன், கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
