கோவில்பட்டி, மணியாச்சியில் வாஞ்சிநாதன் 113 வது நினைவு தினம்

இந்திய கலாச்சார நட்புறக்கழகம் சார்பாக சுதந்திர தியாகி வாஞ்சிநாதன் 113வது நினைவு தின நிகழ்ச்சி கோவில்பட்டி காயத்ரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமைதாங்கினார். இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் மாநில செயலாளர் க.தமிழரசன் தியாகி வாஞ்சிநாதனின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேசினார்,.
தியாகி வாஞ்சிநாதன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் நிர்வாகிகள் சுபேதார் கருப்பசாமி, கல்லூரணி ராதாகிருஷ்ணன், ஆவல்நத்தம் லட்சுமணன், செண்பகம், உத்தண்டராமன், ஜீவா, மோகன் ,கலை இலக்கிய பெருமன்றம் ஜெயா ஜனார்த்தனன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், பகத்சிங் இரத்ததான கழக அறக்கட்டளை காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், வேம்பு மக்கள் சக்தி இயக்கம் தேவராஜ், சுபத்ரா, வழக்கறிஞர் முத்துக்குமார், ஐ.என்.டி.யு.சி. ராஜசேகரன், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் ராமசுப்பரமணியன் நன்றி கூறினார்.

வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் நடந்த வாஞ்சிநாதன் நினைவு நாளில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ்,கொல்லங்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் லதா முருகன்,மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா முருகன் கொல்லங்கிணறு விஏஓ செல்வி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வாஞ்சிநாதன் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
